Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கும் மக்கள்..

சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கும் மக்கள்..

Arun Prasath

, வியாழன், 26 டிசம்பர் 2019 (09:50 IST)
அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை மக்கள் சூரிய கண்ணாடி மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வானில் அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் இன்று காலை தெரிய தொடங்கியது, சூரியனை நிலவு படிபடியாக மறைத்து பின்பு சூரியனின் நடுப்பகுதியை 93% மறைத்தது. இதனால் சூரியன் நெருப்பு வளையம் போல் தோன்றியது.
webdunia

தமிழகத்தில்  கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு தெரிய ஆரம்பித்தது.

துபாயில் முதலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கிய நிலையில், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால், மக்கள் சூரிய கண்ணாடி மூலம் கிரகணத்தை ஆர்வமுடன் காண ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த பயம் இருக்கணும்! பாஜகவும் ஸ்டாலினும் மாறி மாறி பதிவு செய்த டுவிட்டுக்கள்!