Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையை கணவரே சுட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:54 IST)
பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவரை அவரது கணவரே சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டின் நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவர் அந்நாட்டின் கைபர் பக்துங்குவா என்ற பகுதியில் அவருடைய சகோதரருடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரேஷ்மாவின் கணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ரேஷ்மாவை சுட்டு கொலை செய்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ரேஷ்மாவின் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments