Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா! – தடுப்பூசி எடுக்க தயங்கும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:50 IST)
சமீபத்தில் சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ள நிலையில் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனாவுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சில நாட்கள் முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா உறுதியான சில மணி நேரங்களிலேயே அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments