Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா! – தடுப்பூசி எடுக்க தயங்கும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:50 IST)
சமீபத்தில் சீன தடுப்பூசி போட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ள நிலையில் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனாவுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சில நாட்கள் முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா உறுதியான சில மணி நேரங்களிலேயே அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவின் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments