Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்து மக்கள் கட்சியினர் வித்தியாசமாக வேட்பு மனு தாக்கல்

இந்து மக்கள் கட்சியினர் வித்தியாசமாக வேட்பு மனு தாக்கல்
, சனி, 20 மார்ச் 2021 (23:39 IST)
.

கரூரில் மண் பானைகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு மாவட்ட தலைவர் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்.

கரூரில் மண் பானைகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு மாவட்ட தலைவர் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு  வேட்புமனு தாக்கல்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட தலைவர் காலனி மணி இன்று கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொறுப்பாளர் சுரேஷ், மாநில செயலாளர் கோபி, மாவட்ட துணை செயலாளர் கெங்காதாரன், தாந்தோன்றி ஒன்றிய நகர செயலாளர் விஜயேந்திரன், கரூர் மாவட்ட தொழில்பிரிவு யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர், கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வழிபாடு நடத்தி, பின்னர் சுபாஸ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தனது வேட்பு மனுவினை இந்து மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் காலனி மணி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ம. நீ.ம கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் வேட்பு மனு தாக்கல்