Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து: 15 பேர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (06:49 IST)
பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான சிறிய வகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாப பலியாகியுள்ளனர். மேலும் விமானத்தின் பைலட்டுக்கள் இருவரும் பலியாகியுள்ளனர்.
 
இன்று அதிகாலை பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே பாகிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டதால் இந்த தீயில் கருகி பொதுமக்கள் சிலர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் காயம் அடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விபத்துக்கு எந்தவித சதியும் காரணம் இல்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments