Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் வாங்கலையோ.. கேஸ்! பிளாஸ்டிக் பைகளில் கேஸ் விற்பனை! – பாகிஸ்தானில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (08:13 IST)
பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை காரணமாக கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கேஸ் நிரப்பி செல்வதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அன்றாட பொருட்கள் கிடைப்பதிலேயே பெரும் பற்றாக்குறை எழுந்துள்ளது. பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் மக்கள் கேஸ் விற்பனை நிலையங்களில் பெரிய பெரிய பிளாஸ்டிக் பைகளில் கேஸை நிரப்பி எடுத்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பைகளில் சிறிய வால்வுகளை பொருத்தி அவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ALSO READ: கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு - இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்?

அவ்வாறாக பிளாஸ்டிக் பைகளில் கேஸை நிரப்பி சென்றபோது அவை வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments