Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை பாராட்டிய பெண் வர்ணனையாளருக்கு குவிந்த கண்டனங்கள்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (21:38 IST)
பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி சிக்ஸர்களாக அடித்து வானவேடிக்கை காட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் வர்ணனையாளருமான ஜய்னப் அப்பாஸ் என்பவர் தனது டுவிட்டரில் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 
உலகின் சிறந்த ஃபினிஷர் என்பதை தோனி நிரூபித்துவிட்டதாகவும், என்ன ஒரு ஷாட் என்றும் புகழ்ந்துள்ளார். தோனியை புகழ்ந்த பெண் பத்திரிகையாளர் ஜய்னப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்காமல் தனிமைப்படுத்தி வரும் நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனிக்கு பாராட்டு தெரிவித்தது தவறு என்றும் பல பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments