Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:44 IST)
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இம்ரான் கான் போட்டியிட மனுக்கள் அளித்ததாகவும் ஆனால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக  இருந்த இம்ரான் கான் பதவி காலத்தில் பரிசு பொருட்களை பெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் அந்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டாலும் ரகசிய தகவல்களை அவர் கசியவிட்டதாக கூறி மீண்டும் கைது செய்யப்பட்டதால் அவர் தற்போது சிறையில் உள்ளார்.

 இந்த நிலையில்  இம்ரான் கான் ஐந்த ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிறையில் இருந்து அவர் லாகூர் மியான்வாலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த இரண்டு வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments