Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் போரை நிறுத்துவதற்காக போகல.. அதை விட பெரிய மேட்டர்! - ஜி7 மாநாட்டில் வெளியேறியது குறித்து ட்ரம்ப்!

Prasanth K
செவ்வாய், 17 ஜூன் 2025 (12:51 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பரபரப்புக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜி7 உச்சி மாநாட்டை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

 

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்கி வருவதால் மத்திய தரைக்கடலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள அமெரிக்கர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தார் ட்ரம்ப். இதனால் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை நடத்துமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

 

இந்நிலையில்தான் இன்று கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த உச்சி மாநாட்டிலிருந்து டொனால்டு ட்ரம்ப் அவசரமாக கிளம்பி அமெரிக்கா சென்றார். ஈரான் போர் நிறுத்தம் விவகாரமாக அவர் வெளியேறிவிட்டதாக இமானுவேல் மெக்ரான் கூறியிருந்தார். 

 

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் “விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 'போர் நிறுத்தம்' ஏற்படுத்துவதற்காக டி.சி.க்குத் திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார். காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

 

போர் நிறுத்தம் குறித்த விஷயம் இல்லை என்றால் அதை விட பெரிய விஷயம் என்னவாக இருக்கும்? அமெரிக்காவும் ஈரானுக்கு எதிரான போரை தொடங்க போகிறதா? அல்லது வேறு சமாச்சாரமா? என்ற கேள்விகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments