Publish Date: Tue, 16 May 2017 (17:54 IST)
Updated Date: Tue, 16 May 2017 (17:59 IST)
ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தது வடகொரியா என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்கள் தக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு நிறுவன கம்ப்யூட்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இதன்மூலம் உலகம் முழுவதும் தற்போது பெரும் அச்சத்தில் உள்ளது.
இதுவரை 150 நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தக்குதல் நடத்தியது வடகொரியா என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் கேஸ்பர்ஸ்கி போன்ற மென்பொருள் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,