Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் தற்பெருமைக்கு பதிலடி கொடுத்த வடகொரியா!

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (15:48 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என அமெரிக்கா விமர்சனம் செய்ததற்கு வடகொரியா பதிலளித்துள்ளது. 
 
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் தனது நிர்வாகம் வலிய, பாதுகாப்பான, பெருமைமிகு அமெரிக்காவை உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.
 
மேலும், அமெரிக்கா குறித்த கனவை வாழ்வதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்தார். அதோடு, வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என விமர்சித்தார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  டிரம்ப் தற்பெருமை அடித்துக் கொள்கிறார். வடகொரியாவை நோக்கி விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார். மேலும், அணு ஆயுதங்கள் மூலம் தங்களை பாதுகாத்துக் கொண்டு, பிறநாடுகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments