Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (15:40 IST)
தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 
கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சார்பாக மீத்தேன் எடுக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர் போராட்டங்களையும் நடத்தினர். எனவே, அந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது. 

 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் காஸ் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி சார்பில் எந்த புதிய திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை எனக் கூறிய அவர், மாநில அரசு மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி பெற்ற பின்னரே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

அடுத்த கட்டுரையில்
Show comments