Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரேவாரத்தில் 3 வது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (23:06 IST)
வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், பொருளாதார சிக்கல், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொடர்ந்து, அமெரிக்காவில் ஆதரவுள்ள தன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து நடத்தி வருவதுடன் கண்டம்விட்டு  கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகிறது.

இதனால் கொரிய பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது, சமீபத்தில் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 2 ஏவுகணைகளை வடகொரிய ஏவிய நிலையில், அடுத்து, மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக ஏவுகணை ஏசியது. இந்த நிலையில், இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இது மிகப்பெரிய ஏவுகணை என்று கூறப்படுகிறது. ஓரே வாரத்தில் மட்டும் இந்த நாடு 3 முறை ஏவுகணை நடத்தியுள்ளது அண்டை நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments