Publish Date: Fri, 10 Mar 2023 (22:56 IST)
Updated Date: Fri, 10 Mar 2023 (22:59 IST)
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகாரன் ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், பொருளாதார சிக்கல், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொடர்ந்து, அமெரிக்காவில் ஆதரவுள்ள தன் அண்டை நாடான தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து நடத்தி வருவதுடன் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதற்கு அமெரிக்கா , ஐ நாசபை கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்த போதிலும் வடகொரியா தன்செயலை மாற்றிக்கொள்வதாக இல்லை. சமீபத்தில், அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த நிலையில், வடகொரியாவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாம்போநகர் பகுதியில், இன்று ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.