Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் vs கிம்: யார் ஏமாளி? வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

Webdunia
ஞாயிறு, 5 மே 2019 (12:42 IST)
வடகொரியா அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. 
 
ஆம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது.
 
வடகொரிய பல ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில் அமெரிக்கா அதனை கடுமையாக எதிர்த்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வந்தது. இதன பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து, இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. 
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாடுகளுக்கும் எந்த நற்பயனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனால், வடகொரியா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தது.
 
இந்நிலையில் இன்று வடகொரியாவில் உள்ள கிழக்கு கடலோர நகரமான வோன்சான் அருகே அமைந்துள்ள ஹோடோ தீபகற்ப பகுதியில் இருந்து குறைந்த இலக்கில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்துள்ளது.
வட கொரியா ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் கிழக்கு கடலை நோக்கி 70 முதல் 200 கிமீ தொலைவுக்கு பாய்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments