Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:38 IST)
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் கொரோனா பாதிப்பால் பொருளாதாரமே ஆட்டம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 21 மாநிலங்களில் அதாவது ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், அசாம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, சண்டிகார், மேகாலயா, அருணாசலபிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, லடாக், தத்ரா நகர் ஹவேலி டாமன் டையு, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய பகுதிகளில் ஒருவர் கூட கொரோனா பாதிப்பால் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1817 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் நேற்று ஒரே நாளில் 88 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் உயிர் பலி இல்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments