Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்முறையாக இந்திய அணி பலவீனமாக உள்ளது: கிரேக் சேப்பல்

India
, ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (15:03 IST)
முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் பலவீனமாக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரருமான கிரேட் சேப்பல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதியும், இரண்டாவது பிப்ரவரி 17ஆம் தேதியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் இல்லாதது குறித்து கருத்து தெரிவித்த கிரேக் சேப்பல் முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி பலவீனமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் விலகல்