Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் மீண்டும் படுவீரியமான கொரோனா வைரஸ்! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (16:09 IST)
இங்கிலாந்தில் ஏற்கனவே வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மேலும் வீரியமான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு வகையான புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அவை எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் முந்தைய வீரியமிக்க கொரோனாவை விட அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் வீரியமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.. ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து ஈபிஎஸ்

தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?

2வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

பவன் கல்யாண், விஜய், சரத்..Etc, திமுகவுக்கு எதிராக வலுசேர்க்கும் நயினார்? - பாஜக ஸ்கெட்ச்!

அடுத்த கட்டுரையில்
Show comments