ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சனை தீரும்: இஸ்ரேல் பிரதமர் அதிர்ச்சி பேச்சு..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (12:05 IST)
ஈரான் மதகுருவை கொலை செய்தால் தான் பிரச்சினை தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் பயமுறுத்தும் ஈரானால் 50 ஆண்டுகளாக மோதல்கள் அதிகரித்து வருகிறது. 
 
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்களில் குண்டு வீசித் தாக்கி உள்ளது. ஈரான் பயங்கரவாதத்தை எல்லா இடத்திலும் பரப்புகிறது. நாங்கள் எங்கள் எதிரியை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. உங்கள் அனைவரின் எதிரியையும் எதிர்த்துப் போராடுகிறோம். 
 
ஈரான் பயங்கரவாதத்தால் உலகம் முழுவதும் அழிவு நிலைக்கு தள்ளப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்ரேலின் கடமை. தீய சக்திகளை எதிர்த்து நாங்கள் போராடுவோம். 
 
ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனி என்பவரை கொல்வதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு" என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது 420 பிரிவில் வழக்குப்பதிவு..!

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு

டிட்வா புயல் எதிரொலி.. சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்..!

ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு தயாராக இருக்கிறோம்.. எல்லை பாதுகாப்பு படை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments