Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாள அதிபர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Ram Chandra Poudel
, புதன், 19 ஏப்ரல் 2023 (22:15 IST)
நேபாள நாட்டில் பிரதமர் புஷ்பா கலம் தாஹல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் அதிபர் ராம்சந்திர பவுதல் (71) சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திடீர் வயிற்று வலிகாரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல் நலக்குறைவால் ராம்சந்திர பவுதல் பாதிக்கப்பட்ட  நிலையில், குடும்பத்தினர் அவரை தலைநகர் காத்மண்டுவில் உள்ள   டியூ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

எனவே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவுக்கு சவாலாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா