Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாளத்தில் இடைக்கால அரசு.. முன்னாள் சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி பொறுப்பேற்பு..!

Advertiesment
நேபாளம்

Siva

, வியாழன், 11 செப்டம்பர் 2025 (08:39 IST)
நேபாளத்தில் இளைஞர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகிய பிறகு அவர் துபாய்க்குத் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த திடீர் அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், நேபாளத்தில் இடைக்கால அரசு அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
ராணுவம் தரப்பில் போராட்டக் குழுவினருடன் இணைய வழியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இடைக்கால அரசுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 
இதனை தொடர்ந்து, இடைக்கால அரசை வழிநடத்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போராட்ட குழுவினர் இவருக்கு பரவலாக ஆதரவு தெரிவித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
நேபாளத்தில் அடுத்த தேர்தல் நடைபெறும் வரை சுசீலா கார்கி இடைக்கால அரசின் பொறுப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி விவகாரம்.. பதவி விலகுகிறாரா நயினார் நாகேந்திரன்?