Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு பரோல்

Advertiesment
நவாஸ் ஷெரிப்
, புதன், 12 செப்டம்பர் 2018 (06:55 IST)
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷரிப்பின் மனைவி மரனமடைந்ததால் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
 
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால்  பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது. 
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மருமகன் மரியம் நவாஸுக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சும் நவாஸ்ன் நேற்று காலமானார். இதனால் நவாஸ் ஷெரிப், அவரது மகள், மற்றும் மருமகன்  இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
 
இதனையடுத்து அவர்களது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்களுக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது. இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின்னர் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுப் படுகொலை - ரௌடிகள் அட்டுழியம்