Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேரா மோதுறதுக்குதான் வந்துட்டு இருக்கேன்!?? – பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்!

Advertiesment
World
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (12:33 IST)
பூமியை நோக்கி மோதும் வேகத்தில் சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் சுற்றி வரும் கோள்கள் மற்றும் விண்கற்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபோபிஸ் என்ற சிறு கோளை நாசா கண்டறிந்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான வரும் அந்த சிறு கோள் குறிப்பிட்ட வட்டபாதை அற்றதாகவும், ஒரே திசையில் பயணித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அபோபிஸின் பயண திசை மற்றும் வேகத்தை பொறுத்து அந்த சிறுகோள் பூமியின் மீது 2068ம் ஆண்டில் தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணக்கீடு செய்துள்ளனர். இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரலாற்றில் முன்னதாக இதுபோல பல சிறு கோள்கள் பூமியை கடந்து சென்றுள்ளதால், இதுவும் எந்த அசம்பாவிதமும் இன்றி கடந்து போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க வேணாம்னாலும் நாங்க விட மாட்டோம்! – ரஜினி வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்!