Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 கிராம மக்களை உயிரோடு எரித்த ராணுவம்! – மியான்மரில் வெறிச்செயல்!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (12:41 IST)
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் கிராம மக்கள் 11 பேரை எரித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் அமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது,. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் போராடி வரும் நிலையில் தேசத் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம், மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவி வருகிறது.

இந்நிலையில் மியான்மரி வடமேற்கு பகுதியில் மொனிவா நகரில் ராணுவம் அணிவகுத்து சென்றபோது சிலர் அணிவகுப்பு மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்து 11 பேரை பிடித்து உயிரோடு எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராணுவம் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

ஈரான் - இஸ்ரேல் போரால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உயரும் இந்திய பங்குச்சந்தை..!

5 நாள் தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் திடீரென எழுந்த புகை.. பயணிகள் நிலை என்ன?

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

அடுத்த கட்டுரையில்
Show comments