Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு: ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு!

Advertiesment
கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு: ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (08:43 IST)
நேற்று விபத்துக்கு உள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளானதில் ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். 
 
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி நேற்று நள்ளிரவு வரை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ராணுவ அதிகாரிகள் அந்த கருப்பு பெட்டியை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த கருப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் இருக்கும் என்பதால் ஹெலிகாப்டர் விபத்து காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வரைவு அறிக்கை திருப்தியாக இல்லை! – மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய விவசாயிகள்!