மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (16:37 IST)
மொராக்கோவில்  நேற்றிரவு 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இங்கு நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நில நடுநடுக்கத்தால் பலர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், இந்த நிலநடுக்கம் அல்ஜீரியா, போர்ச்சுக்கல் வரை உணரப்பட்டதாகவும், இதில் சுமார் 639 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மொரோக்கோ அமைச்சகம், நிலநடுக்கத்தால் 296 பேர் பலியானதாகவும்,  படுகாயமடைந்த 329 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்,  நேற்றிரவு 11:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், அதன்பின்னர், மீண்டும் 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில்  நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

மொரோக்கோ தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவானதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments