Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (16:37 IST)
மொராக்கோவில்  நேற்றிரவு 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொரோக்கோ. இங்கு நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நில நடுநடுக்கத்தால் பலர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், இந்த நிலநடுக்கம் அல்ஜீரியா, போர்ச்சுக்கல் வரை உணரப்பட்டதாகவும், இதில் சுமார் 639 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மொரோக்கோ அமைச்சகம், நிலநடுக்கத்தால் 296 பேர் பலியானதாகவும்,  படுகாயமடைந்த 329 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்,  நேற்றிரவு 11:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், அதன்பின்னர், மீண்டும் 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில்  நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

மொரோக்கோ தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் இந்த  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவானதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments