Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு மறுக்கப்பட்ட அழைப்பு... ஆனால் இவர்களுக்கு மட்டும்: இம்ரான் கான்!

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இவரது பதவியேற்பு விழாவிற்கு, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, அமீர்கான்  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
பதவியேற்பு விழாவிற்கு மோடி அழைக்கப்படுவார் என செய்திகள் வெளியான நிலையில், மோடிக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
ஆனால், வெளிநாடுகளை சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments