Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒயின் தோட்டத்தில் உயிரை விட்ட தேனீக்கள்: காரணம் என்ன?

ஒயின் தோட்டத்தில் உயிரை விட்ட தேனீக்கள்: காரணம் என்ன?
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:44 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஒயின் தயாரிப்பு பகுதியில் விஷம் கொடுத்ததால் குறைந்தது ஒரு மில்லியன் தேனீக்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஒயின் விவசாயிகள் பயன்படுத்திய பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி மருந்து உயிரிழப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுவதாக தேனீக்கள் உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளரான பிரெண்டன் ஆஷ்லே கூப்பர் தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள மற்ற ஒயின் தோட்டங்களிலும் தேனீக்கள் உயிரிழந்துள்ளதால், இன்னும் எத்தனை தேனீக்கள் உயிரிழந்திருக்கிறது என்பது தெரியவில்லை.
 
இதற்கு முன்னர் ஐரோப்பாவில் மில்லியன்கணக்கான தேனீக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி குற்றஞ்சாட்டப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைது செய்யப்படுகிறாரா முருகதாஸ்? மீண்டும் கிளம்பிய சர்கார் பிரச்சனை..