ஊருக்கு உபதேசம் .... வீட்டில் கொடுமைப்படுத்திய யூடியூபர் கைது!

Sinoj
வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:15 IST)
ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, வீட்டில் குழந்தைகளை கொடுமைப்படுத்திய பெண்ணுக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நாட்டைச் சேர்ந்த உருபி பிராங்க் என்பவர் சமூக வலைதளமான யூடியூபில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று மற்ற பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார்.
 
இந்த  நிலையில், ஊருக்கு தான் உபதேசம் தனக்கில்லை என்பது போல் அவர் தன் பிள்ளைகாளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
 
அதாவது, தன் குழந்தைகள் சாத்தானின் பிடியில் இருப்பதாக்க கூறி  வீட்டிற்குள் அடைத்து வைத்து, கொடும்படுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரின் 12 வயது மகன் ஜன்னல் வழியே தப்பிவந்து அருகில்  இருப்பவர்களிடம் கூறவே, ரூபி ப்ராங்க் பற்றிய உண்மை வெளியானது.
 
இந்த நிலையில், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் அவர் மீதான  குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments