குரங்கு அம்மைக்கு இனி புதிய பெயர்..? – ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (11:02 IST)
குரங்கு அம்மை நோய் என்ற பெயர் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தற்போதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ள நிலையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஊடகங்களில் அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துதல் மற்றும் செய்திகளில் ஆப்பிரிக்காவை குறிப்பிட்டு மட்டுமே பேசுவது பாகுபாடு நிறைந்ததாக உள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் குழு குரங்கு அம்மையின் பெயரை மாற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விரைவில் இதன் பெயர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments