ஷேக் ஹசீனா அறிக்கைகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை..!

Siva
புதன், 19 நவம்பர் 2025 (08:18 IST)
முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா அவர்களின் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என வங்கதேச அரசு எச்சரிக்கை விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஷேக் ஹசீனா அறிக்கையில் உள்ள கருத்துக்கள் வன்முறையை தூண்டி, சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருடைய செய்திகளை வெளியிட்டால், அந்த ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கதேசம் அறிவித்துள்ளது. முன்னதாக, வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது என்பதும், இந்தத் தண்டனைக்கு வங்கதேசத்திற்கு உள்ளும், இந்தியா உள்பட வெளிநாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஷேக் ஹசீனா அறிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments