Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: 41 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறை!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (16:37 IST)
பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 41 வயதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரான்ஸ் நீதிமன்றம்.
 
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சின் ஒரு காட்டு பகுதியில் பெண் ஒவரின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. உறைந்த நிலையில் நிர்வாணமாக சந்தேகத்துக்குரிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
 
மருத்துவ பரிசோதனையின் முடிவில், அந்த பெண் போதை மருந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் அந்த பகுதியில் பத்திரிக்கை விநியோகம் செய்யும் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கின் தொடர் விசாரணைகளுக்கு பின்னர் அந்த நபர்தான் குற்றவாளி என்பது நிரூபனமாகியது. இதனையடுத்து அந்த நபருக்கு நேற்று 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இறந்து போன அந்த பெண் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments