Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போடடிக்கும் வேலையைக் கொடுத்து என் மனநிலையைக் கெடுத்துவிட்டார்கள்… நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்த நபர்!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:46 IST)
பிரான்சில் தான் வேலைப் பார்த்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் டெஸ்னார்ட் என்ற நபர் இன்டர்பர்ஃபும்ஸ் என்ற வாசனைத் திரவிய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவர் வேலை பார்த்த போது மிகவும் சலிப்பாக உணர்ந்ததாகவும், அதனால் மன நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் ஒரு முக்கியமான வாடிக்கையாளரை இழந்ததாகவும், அதனால் நிறுவனம் தன்னை பதவி இறக்கம் செய்தது. இதனால் நான் எதற்கும் லாயக்கற்றவன் என்ற நினைக்க ஆரம்பித்தேன்.

எனது மருத்துவர் அறிவுறுத்தலின் படி நான் 6 மாத காலம் விடுப்பு எடுத்துக்கொண்டேன். ஆனால் என்னை நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதுபற்றி வழக்கு தொடர்ந்த டெஸ்னார்ட் இப்போது நீதிமன்றத்திடம் இருந்து நீதியும் பெற்றுள்ளது. அவருக்கு 40000 யூரோ (இந்திய மதிப்பில் 34 லட்சம்) இழப்பீடாக வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments