Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபர் கைது

Advertiesment
turkey
, வியாழன், 16 நவம்பர் 2023 (15:38 IST)
துருக்கியின் இஸ்தான்புல் நககரில் ஓட்டல் தன் மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் சமீபத்தில் துருக்கி  நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது, தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடந்த கணவர் தன் மனைவியை ஸ்க்குரூடிரைவரால் 41முறை குத்திக் கொன்றார்.

ஓட்டல் அறையில் இருந்து கதறல் சத்தம் கேட்டு,  ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது. ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுபற்றி போலீஸுக்கு தகவல் கூறினர்.

அங்கிருந்து ரத்தக் கறையுடன் கூடிய டி சர்ட் அணிந்து ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்