Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாப்பிங் மாலில் கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய மழைநீர்: பெண் காயம்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
சீனாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் திடீரென ஏற்பட்ட புயல் மழையால் புகழ்பெற்ற ஒரு ஷாப்பிங் மாலின் கூரை பிய்த்து கொண்டு போக, அந்த இடைவெளியே மழைநீர் மாலுக்குள் கொட்டி ஒரு பெண் வாடிக்கையாளர் இழுத்து கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
 
சீனாவில் உள்ள டங்குவான் என்ற நகரில் கடந்ஹ ஞாயிறு அன்று பைலு என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. அப்போது அந்நகரில் உள்ள புகழ்பெற்ற ஹுய்க்ஸிங் என்ற ஷாப்பிங் மாலின் மேற்கூரையை சூறாவளி காற்றால் பிய்த்துக் கொண்டு சென்றது. இதனையடுத்து மழை நீர் அருவி போல் திடீரென ஷாப்பிங் மாலுக்குள் கொட்டியது. அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அந்த மழை நீரினால் தரையில் விழுந்து பல அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
 
இதனையடுத்து மாலின் செக்யூரிட்டிகள் அந்த பெண்ணை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த ஷாப்பிங் மாலில் கேன்வாஸ் வகை மேற்கூரை அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments