இறைச்சி பட்டியலில் சேரும் விலங்குகள் எவை? சீனா தயாரித்த புது லிஸ்ட்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (12:21 IST)
சீனாவில் இனி எந்தெந்த விலங்குகள் இறைச்சிக்காக வளர்க்கப்படலாம் என பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு. 
 
கொரோனா வைரஸ் இறைச்சிகளை உண்டு பரவியதாக நம்பப்படும் நிலையில் சீனா எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா ஆகியவற்றை வளர்க்கலாம். நரி, கீரி, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம் ஆனால் அதனை இறைச்சியாக பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலுக்கு காரணமாக பார்க்கப்படும் எறும்பு திண்ணி மற்றும் வவ்வால்களுக்கு இந்த பட்டியலில் இடமில்லை. அதேபோல நாய்களுக்கும் இடமில்லை. பூனைகள் குறித்த எந்த தகவலும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments