மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

Siva
வெள்ளி, 14 நவம்பர் 2025 (17:04 IST)
துபாயில் உறவினர்களை பார்க்க சென்றிருந்த 19 வயதான கேரள இளைஞர் ஒருவர், கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
விமானங்களை புகைப்படம் எடுப்பதற்காக மாடிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
உயிரிழந்த இளைஞர் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது மிஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  நவம்பர் 7 ஆம் தேதி டேரா பகுதியில் உள்ள ஒரு பல மாடி கட்டடத்தில் மிஷால், விமானங்களின் காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக கட்டடத்தின் மாடிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார் என்று கூறப்படுகிறது.
 
கீழே விழுந்த மிஷால் உடனடியாக ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பலத்த உள் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், மருத்துவமனையை அடைந்த சிறிது நேரத்திலேயே அவர் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மிஷால் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கோழிக்கோட்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தமது பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments