Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!

100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (09:34 IST)
கஜகஸ்தானில் விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டு அல்மத்தி நகரிலிருந்து தலிநகர் நுர்சுல்தானுக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. 95 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் புறப்பட்ட விமானம் விமான நிலையம் அருகே இருந்த கட்டிடத்தில் மோதி சிதறியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட போதே போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடத்தில் மோதியிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கஜகஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா காணாத ஒரு போராட்டத்தை நடத்துவோம்! – மு.க.ஸ்டாலின் உறுதி!