எல்லாரும் ஒரு கப் பால் எக்ஸ்ட்ரா குடிங்க! – ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (16:02 IST)
ஜப்பான் மக்களை ஒரு கப் பால் அதிகமாக அருந்த சொல்லி அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜப்பானில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையில் குளிர்காலங்களில் பால் பொருட்கள் விற்பனை குறைவதுடன், அவை வீணாய் போவதும் தொடர்கிறது. இந்நிலையில் இதுகுறித்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் தற்போதைய நிலவரப்படி 5,000 டன் பச்சை பால் வீணாகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதை தவிர்க்க வேண்டி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மக்கள் அனைவரும் தினம் ஒரு கப் பால் கூடுதலாக குடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். அதுபோல சமையலிலும் பால் பொருட்களை பயன்படுத்த அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் பால் வாங்குவதை ஊக்குவிக்க விடுமுறை காலங்களில் சலுகை விலையில் பால் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் தலைமறைவு ஆனாரா?.. நடந்தது என்ன?.....

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments