மக்களுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒன்னா? – ஜப்பான் அமைச்சரை பதவி நீக்கிய பிரதமர்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:41 IST)
ஜப்பானில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறிய அமைச்சரை அந்நாட்டு பிரதமர் பதவி நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது வீரியமிக்க கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை மேலும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் ஜப்பானிலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை சட்டை செய்யாத அமைச்சர் டெய்டோ டானோஸெ அவசர நிலை அறிவிப்புகளை மதியாமல் இரவு விடுதிக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு சட்டமெல்லாம் மக்களுக்கு மட்டும்தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில் அமைச்சர் டெய்டோவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments