Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ் ஜே சூர்யாவின் ’கடமையை செய்’ – யாஷிகா ஆனந்தோடு கூட்டணி!

எஸ் ஜே சூர்யாவின் ’கடமையை செய்’ – யாஷிகா ஆனந்தோடு கூட்டணி!
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:41 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிருபித்தவர் எஸ் ஜே சூர்யா.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முத்தின கத்திரிக்கா படத்தின் இயக்குனர் வெங்கட் இயக்கும் கடமையை செய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நடிகரிடம் திரைப்படத்தின் வசூல் பற்றி கேட்காதீர்கள்- ஜீவா பேட்டி!