Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலா காரில் அதிமுக கொடி! – அதிமுக நிர்வாகிகள் போலீஸில் புகார்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:31 IST)
பெங்களூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிக்கலா அதிமுக கொடி பொருத்திய காரில் சென்றது குறித்து அதிமுக நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குணமடைந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆன அவர் முன்னாள் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதில் பயணித்தார்.

அதை தொடர்ந்து சசிக்கலா அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமையில்லை என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் கொடியை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக சசிக்கலா மீது அதிமுக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments