சசிக்கலா காரில் அதிமுக கொடி! – அதிமுக நிர்வாகிகள் போலீஸில் புகார்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:31 IST)
பெங்களூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிக்கலா அதிமுக கொடி பொருத்திய காரில் சென்றது குறித்து அதிமுக நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குணமடைந்து சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆன அவர் முன்னாள் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதில் பயணித்தார்.

அதை தொடர்ந்து சசிக்கலா அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமையில்லை என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் கொடியை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக சசிக்கலா மீது அதிமுக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments