Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

Mahendran
திங்கள், 11 நவம்பர் 2024 (11:46 IST)
லெபனான்  நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த பேஜர் தாக்குதலில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான் தான் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லெபனான் நாட்டில் தகவல் பரிமாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் பேஜர் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவை வெடித்து சிதறியதால் 40 பேர் பலியாகியதாகவும், 3000 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

லெபனான் மீது இஸ்ரேல் படையினர் தொடர் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த பேஜர் தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல் அரசு இருப்பதாக லெபனான் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டை இரண்டு மாதங்களுக்கு பின்னால் இஸ்ரேல் பிரதமர் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் பேஜர் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிவிப்பு இருநாட்டின் இடையே மேலும் பகையை வளர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments