Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் பதட்டம் எதிரொலி: இன்று நடைபெறவிருந்த இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் என்ன ஆனது?

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (10:56 IST)
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் மோதல்கள் காரணமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இன்று அதாவது ஜூன் 16ஆம் தேதி டெல் அவிவ் நகரில் நடைபெறவிருந்த அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் தற்போதைய சூழல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இஸ்ரேலியர்கள் சிலர் இன்னும் காஸாவில் பிணை கைதிகளாக இருக்கும் நிலையில், பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்தே அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
டெல் அவிவ் நகரை சுற்றிலும் திருமண விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்