Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

Advertiesment
Donald Trump

Prasanth K

, செவ்வாய், 24 ஜூன் 2025 (09:35 IST)

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக சொன்ன ட்ரம்ப், அவர்களே வந்து தன்னிடம் மத்தியஸ்தம் செய்து வைக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க விமானப்படை ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அதை தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது.

 

இப்படியாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் ஈரான் - இஸ்ரேல் நாடுகளிடம் தான் பேசியதாகவும், விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை ஈரான் பகிரங்கமாக மறுத்தது.

 

தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ட்ரம்ப்புடன் எந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் ஈரான் மறுத்துள்ளது.

 

அதை தொடர்ந்து தற்போது பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் வந்து, "அமைதி!" என்றன. இப்போதுதான் நேரம் என்று எனக்குத் தெரியும். உலகமும் மத்திய கிழக்கு நாடுகளும்தான் உண்மையான வெற்றியாளர்கள்! இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும். நீதி மற்றும் உண்மையின் பாதையிலிருந்து அவர்கள் விலகிச் சென்றால் அவர்கள் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால் இழக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஈரானின் எதிர்காலம் வரம்பற்றது, மேலும் பெரிய வாக்குறுதிகளால் நிறைந்துள்ளது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக!” என பதிவிட்டுள்ளார்.

 

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்திலேயே தொடர்ந்து நான் தான் போரை நிறுத்தினேன் என பேசி வந்த ட்ரம்ப் அடுத்து ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?