Webdunia - Bharat's app for daily news and videos

Install App

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 10 ஜூலை 2025 (13:15 IST)
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை 15ஆம் தேதி 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்டெல் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சிக்கல்களை அகற்றுவது,  செயல்திறனை வலுப்படுத்துவது, லாபத்தை நோக்கி நிறுவனத்தை கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக இன்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 
 
இந்த வேலைநீக்க நடவடிக்கையால் சிப் தயாரிப்பு வல்லுநர்கள், கிளவுட் மென்பொருள் வல்லுநர்கள், பொறியாளர்கள் உட்பட சில முக்கிய பதவிகள் காலியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாள் நோட்டீஸ் அல்லது குறைந்த நான்கு வார நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், ஒன்பது வார ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments