முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளன. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இரண்டு மாடல்களுமே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவிருப்பதுடன், அவற்றின் விலை ₹5,000-லிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
செயலி: யூனிசோக் T8200 புராசஸர்.
இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS).
கேமரா: பின்புறத்தில் இரட்டை 50MP கேமரா அமைப்பு.
பேட்டரி: 5000mAh பேட்டரி திறன்.
நினைவகம்: 6GB ரேம் (உள் நினைவகம்), 128GB சேமிப்புத் திறன்.
விரிவாக்கக்கூடிய நினைவகம்: 1TB வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.
நிறங்கள்: கருப்பு, நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
நோவா பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
செயலி: யூனிசோக் T7250 புராசஸர்.
கேமரா மற்றும் பேட்டரி: நோவா 5ஜி மாடலில் உள்ள அதே பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள்.
இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS).
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.