Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனெசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – 10 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:22 IST)
இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவில் உள்ள புகிதங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள், கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்பதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments