Publish Date: Sat, 12 Feb 2022 (08:35 IST)
Updated Date: Sat, 12 Feb 2022 (08:37 IST)
வடகிழக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கும் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கும் பூமியில் 28 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.