Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

Prasanth K
திங்கள், 7 ஜூலை 2025 (12:46 IST)

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் ராணுவத்தை எதிர்கொண்டு இத்தாலி மண்ணில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் யஷ்வந்த் காட்கேவிற்கு சமீபத்தில் இத்தாலியில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 

1921ம் ஆண்டில் பாம்பேவில் பிறந்த யஷ்வந்த் காட்கே இந்திய ராணுவத்தில் ⅗ மராத்தா லைட் இன்ஃபாண்ட்ரியில் சேர்ந்து தீரமுடன் பணியாற்றினார். 1944 ஜூலை 10ம் தேதியன்று இரண்டாம் உலகப்போரில் இத்தாலி - ஜெர்மன் இடையே நடந்த யுத்தத்தின்போது நேச நாடுகள் படைகள் சார்பில் மராத்தா படை இத்தாலி எல்லையில் போராடியது.

 

அப்போது ஜெர்மனியின் மெஷின் கன் போஸ்ட்டை அடைந்தபோது குண்டு வீசி அதன் நிலைகளை தாக்கிய யஷ்வந்த், ஜெர்மன் வீரர்கள் இருவரையும் கொன்றார், ஆனால் அதே போரில் குண்டடி பல பட்டதால் வீர மரணம் அடைந்தார். அவர் உடல் கடைசி வரை கிடைக்காத நிலையில், அவரது வீரத்தை போற்றும் வகையில் இங்கிலாந்து அரசு விக்டோரியா கிராஸ் விருது வழங்கி கௌரவித்தது. இத்தாலி அரசு அவருக்காக நினைவிடம் ஒன்றை மொண்டோனில் அமைத்தனர்.

 

சமீபத்தில் இந்திய - இத்தாலி உறவை மேம்படுத்தும் விதமாக யஷ்வந்த் காட்கேவின் சிலை ஒன்றை இந்திய அரசு இத்தாலிக்கு அன்பளிப்பாக வழங்கியது. இந்த நினைவுச்சிலையை யஷ்வந்த் காட்கேவின் நினைவிடத்தில் அமைத்து மரியாதை செலுத்தியுள்ளது இத்தாலிய அரசு.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments